ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோ தரியும், ஒய்எஸ்ஆர் தெலுங் கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஏற்கெனவே அறிவித்தது போல வியாழனன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவரும் எம்பி.,யுமான ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிர ஸில் இணைந்தார்.
மேலும் தனது கட்சியையும் காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டார். ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருப்பது தெலுங் கானாவை விட ஆந்திராவில்தான் மற்ற அரசியல் கட்சிகளுக்கு பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கி யமாக ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரு மான ஜெகன் மோகன் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளன.
வரவிருக்கும் மக்கள வைத் தேர்தலுடன் ஆந்திர மாநி லத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஷர்மிளா வை களமிறக்கி சகோதரர் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியை உடைத்து தெலுங்கானா போல ஆட்சியை கைப்பற்றும் முனைப் பில் காங்கிரஸ் வியூகம் அமைந் துள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
சந்திரசேகர ராவை பதிலடியாக சந்தித்த ஜெகன் தனது தங்கை சர்மிளா காங்கி ரஸ் கட்சியில் இணைந்த நிலை யில், இதற்கு மறைமுக பதிலடி என்ற பெயரில் காயமடைந்து சிகிச்சையில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவை சந்தித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. மேலும் தனது ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் கட்சித் தொண்டர்களுக்கு எச்ச ரிக்கை விடுப்பது போல தனது தங்கை ஷர்மிளா காங்கிரஸ் கட்சி யில் இணைந்ததை மறைமுக மாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகை யில், “விரைவில் தேர்தல் வரவுள்ள தால், தேர்தலுக்காக குடும்பங்க ளைப் பிரிக்கவும், பல கட்சிகளு டன் கூட்டணி அமைக்க வருவார் கள். 1 கிலோ தங்கமும், பென்ஸ் காரும் கூடத் தருவார்கள். எது உங் களுக்கு வேண்டுமோ, அதைத் தேர்ந்தெடுங்கள். ஆனால் அவர் களின் மாய வார்த்தைக்கு ஏமாற வேண்டாம்” எனக் கூறினார். தங்கை ஷர்மிளாவை எச்சரிப்பது போன்று முதல்வர் ஜெகன் மோகன் பேசியிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.